Site icon Tamil News

மக்கள் யாரும் உண்டியலில் காசு போடுவதில்லையென பொலிஸாரிடம் புலம்பிய திருடன்!

கேரளாவின் கோழிக்கோட்டில் ஒரே கோயிலில் 3-வது முறையாக திருடி பொலிஸாரிடம் சிக்கிய நபர், இப்போதெல்லாம் மக்கள் யாரும் உண்டியலில் காசு போடுவதில்லை என புலம்பியுள்ளார்.

கோழிக்கோடு பகவதியம்மன் கோயிலில் பூட்டை உடைத்து திருடியது தொடர்பாக சஜீவன் என்ற இளைஞரை கைது செய்த பொலிஸார் விசாரணைக்காக கோயிலுக்கு அழைத்துச் சென்றனர்.

அப்போது, இப்பகுதி மக்கள் எவரும் சரியில்லை, உண்டியலில் யாரும் காசு போடவில்லை என சஜீவன் புலம்பியதைக் கேட்டு சுற்றி நின்றிருந்த மக்கள் சிரித்துள்ளனர்.

இக்கோயிலில் கடந்த 2 முறை உண்டியலை உடைத்து சஜீவன் திருடியிருந்ததால், தினமும் நடை சாத்தும் போது உண்டியலை திறந்து காணிக்கையை கோயில் நிர்வாகத்தினரே எடுத்துக் கொள்வதை வழக்கமாக்கி உள்ளனர். இதுதெரியாமல் திருட வந்தவன் ஏமாற்றத்திற்கு உள்ளானதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Exit mobile version