Site icon Tamil News

டி20 உலக சாம்பியன்களுக்கு ஏற்பட்டுள்ள நிலை- நாடு திரும்ப முடியாமல் தவிப்பு

டி20 உலக சாம்பியன் பட்டத்தை வென்ற இந்திய கிரிக்கெட் அணி, வெஸ்ட் இண்டீசில் உள்ள பார்படாஸ் பகுதியை பாதித்த பெரில் புயல் காரணமாக சொந்த நாட்டிற்கு செல்ல முடியாமல் சிக்கிக் கொண்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

உலகக் கோப்பையை வென்ற இந்திய அணி சிறப்பு விமானத்தில் நேற்று இந்தியா வரும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், சூறாவளி அபாயம் காரணமாக அனைத்து விமானங்களும் ரத்து செய்யப்பட்டு பார்படாஸ் விமான நிலையம் மூடப்பட்டது.

மணிக்கு 130 கிமீ வேகத்தில் புயல் வீசும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்திய அணி இன்று (01) இந்தியா வருவது சந்தேகம் என தெரிவிக்கப்படுகிறது. மோசமான வானிலை காரணமாக இந்திய அணியினர் ஹோட்டலுக்குள் தங்க வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.

Exit mobile version