Site icon Tamil News

சிறைச்சாலை அதிகாரி ஒருவரை தாக்கி கொலை மிரட்டல் விடுத்த சந்தேக நபர்கள்

கொழும்பு புதிய மகசீன் சிறைச்சாலையில் பணிபுரியும் சீர்திருத்த அதிகாரி ஒருவருக்கு இனந்தெரியாத மூவரினால் மரண அச்சுறுத்தல் விடுக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

மினுவாங்கொடை பகுதியில் உள்ள அதிகாரியின் தனிப்பட்ட வீட்டிற்குள் பலவந்தமாக நுழைந்து துப்பாக்கிகளை காட்டி கொலை மிரட்டல் விடுக்கப்பட்டதாக சிறைச்சாலைகள் மேலதிக ஆணையாளர் நாயகம் சந்தன ஏகநாயக்க தெரிவித்தார்.

ஜாக்கெட் மற்றும் தலையை மூடிக்கொண்டு வந்த சம்பந்தப்பட்ட நபர்கள் சிறை கண்காணிப்பாளர் மற்றும் அவரது தாயார் மீதும் தாக்குதல் நடத்தினர்.

சம்பவம் தொடர்பில் மினுவாங்கொடை பொலிஸில் முறைப்பாடு செய்ததையடுத்து குறித்த அதிகாரி சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலை திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.

Exit mobile version