Site icon Tamil News

யாழில் பொதுமக்கள் மற்றம் பொலிஸாரிடையே கைகலப்பு; துப்பாகியை பயன்படுத்திய பொலிஸார் !

யாழ்ப்பாணம் வடமராட்சி நாகர்கோவிலில் இரு தரப்புகளிடையே மயானம் தொடர்பாக ஏற்பட்ட பிரச்சினை நேற்று திங்கட்கிழமை பெரும் களேபரமாக மாறியுள்ளதுடன் துப்பாக்கி சூட்டு சம்பவங்களும் ஏற்பட்டுள்ளது.

இது தொடர்பாக இருதரப்பையும் இன்று பருத்தித்துறை பொலிஸ் நிலையத்திற்கு வருமாறு பொலிஸாரால் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இது குறித்து மேலும் தெரியவருவதாவது, நாகர்கோவிலில் மயானம் ஒன்றின் மதிலுக்கான அடிக்கல் நடும் நிகழ்வு இன்று(14) நடைபெறவுள்ளது.அந்தநிகழ்வுடன் தொடர்புடைய புலம்பெயர்வாசி ஒருவர் மீது நேற்று முன்தினம் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.அது தொடர்பில் பருத்தித்துறை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. அதற்கு அமைவாக நாகர்கோவில் பகுதிக்கு நேற்று மாலை பொலிஸார் விசாரணைக்குச் சென்றுள்ளனர்.

அங்கு மைதானத்தில் விளையாடிக் கொண்டிருந்த இளைஞர்களுடன் பொலிஸார் முரண்பட்டதாக அந்தப் பகுதி மக்கள் கூறுகின்றனர். அந்த முரண்பாடு இறுதியில் கைகலப்பாக மாறியுள்ளது. பொலிஸாரின் தாக்குதலில் பல பேர் காயமடைந்துள்ளதாக மக்கள் தெரிவிக்கின்றனர்.பொலிஸார் துப்பாக்கிச்சூடு நடத்தி நிலைமையைக் கட்டுப்படுத்தியதாகத் ஊர்மக்கள் தெரிவிக்கின்ற போதும் பொலிஸார் துப்பாக்கி சூடு நடத்தவில்லை என மறுத்துள்ளனர். ஆனபோதும் துப்பாக்கி தோட்டாக்கள் சம்பவ இடத்தில் காணப்பட்டுள்ளன.

இந்நிலையில் அந்தப் பகுதியிலுள்ள ஆலய சப்பைரத கொட்டில் ஒன்றும் எரிந்துள்ளதாக மக்கள் தெரிவிக்கின்றனர். இதனால் அந்தப் பகுதியில் பதற்றமான நிலைமை காணப்படுகிறது.இது தொடர்பாக இருதரப்பையும் இன்று பருத்தித்துறை பொலிஸ் நிலையத்திற்கு வருமாறு பொலிஸாரால் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

Exit mobile version