Site icon Tamil News

ஆசிரியையின் பெயரை எழுதி வைத்துவிட்டு தற்கொலை செய்துக்கொண்ட மாணவன்!

வவுனியா  ஆச்சிபுரம் பகுதியில் ஆசிரியரின் பெயரை எழுதி விட்டு பாடசாலை மாணவன் ஒருவர் நேற்று (11) தற்கொலை செய்துக்கொண்டுள்ளார்.

கோவிற்குளம் பகுதியில் உள்ள கல்லூரியில் தரம் 10 இல் கல்வி பயிலும் 14 வயதுடைய பாடசாலை மாணவனே இவ்வாறு  தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துக் கொண்டுள்ளார்.

என் சாவிற்கு காரணம் தனது கல்லூரி ஆசிரியர் என எழுதி வைத்திருந்த கடிதமும் மாணவனின் வீட்டிலிருந்து பொலிஸாரினால் மீட்கப்பட்டது.

குறித்த மாணவனின் சடலம் பிரேத பரிசோதனைக்காக  வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

இவ்விடயம் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்த பொலிஸார் மாணவனின் பெற்றோரிடம் விசாரணைகளை முன்னெடுத்திருந்ததுடன் மேலதிக விசாரணைக்காக குறித்த ஆசிரியரிடமும் விசாரணைகளை முன்னெடுக்கவுள்ளதாக தெரிவித்தனர்.

Exit mobile version