Site icon Tamil News

வெகு சீக்கிரத்தில் பெரும்பான்மையை இழக்கும் இலங்கை அரசாங்கம் !

அரசாங்கம் இன்னும் சில மாதங்களில் பெரும்பான்மையை இழக்கும் எனவும், அரசாங்கத்தின் பெரும்பாலான அமைச்சர்கள் சமகி ஜன கூட்டமைப்பில் இணைவதற்கான பேச்சுவார்த்தைகளை தற்போது மேற்கொண்டு வருவதாகவும் பாராளுமன்ற உறுப்பினர் மயந்த திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

அரசாங்கத்திற்கு 113 பெரும்பான்மை பலம் கிடைக்காத நிலையில், ஜனாதிபதி பாராளுமன்றத்தை கலைக்க நேரிடும் என தெரிவித்த அவர், அதற்கமைவாக ஜனாதிபதி தேர்தலுக்கு முன்னர் பொதுத்தேர்தல் நடத்தப்படும் என நம்புவதாகவும் தெரிவித்துள்ளார்.

இலங்கை பொருளாதார ரீதியில் திவாலாகி இறுதியில் அப்பாவி மக்களைச் செங்கடலின் பாதுகாப்பிற்காக பெருமளவு பணம் செலவழித்து இலங்கை கடற்படையையும் போர்க்கப்பல்களையும் அனுப்புவதற்கு அரசாங்கம் தீர்மானித்ததில் சிக்கல் இருப்பதாக திரு.திஸாநாயக்க மேலும் தெரிவித்தார். செங்கடலின் பாதுகாப்பிற்காக செலவிடப்படும் பணத்தின் சுமையை இலங்கை சுமக்க வேண்டும் என்றும் அவர் மேலும் கூறியுள்ளார்.

Exit mobile version