Site icon Tamil News

நெடுந்தீவில் கைது செய்யப்பட்ட இந்திய மீனவர்களுக்கு விளக்குமறியல் நீடிப்பு!

இலங்கை கடற்பகுதியில் அத்துமீறிய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட மீனவர்கள் 12 பேரையும் எதிர்வரும் ஏப்ரல் மாதம் 6 ஆம் திகதிவரை விளக்குமறியளில் வைக்க ஊர்காவற்துறை நீதவான் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

இந்திய மீனவர்கள் நெடுந்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்த போது அப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்ட இலங்கை கடற்படையினர் இரண்டு படகையும் அதிலிருந்த பன்னிரெண்டு மீனவர்களையும் கைது செய்தனர்.

கைது செய்யப்பட்ட மீனவர்களை மயிலிட்டி அழைத்து வந்த கடற்படையினர் கடற்றொழில் மற்றும் நீரியல் வளத்துறை திணைக்களத்தினரிடம் ஒப்படைத்தனர்.

இந்திய மீனவர்களுக்கு எதிராக கடற்றொழில் நீரியல் வளத்திணைக்களத்தினரால் ஊர்காவற்றுறை நீதிமன்றில் மேற்கொள்ளப்பட்ட வழக்குத்தாக்கலின் அடிப்படையில் விசாரணை மேற்கொண்ட ஊர்காவற்றுறை நீதவான் பன்னிரெண்டு மீனவர்களையும் பதின்நான்கு நாட்களுக்கு விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டார்.

Exit mobile version