Site icon Tamil News

தேர்தல்கள் ஆணைக்குழுவின் கோரிக்கையை ஏற்ற இலங்கை மதுவரித் திணைக்களம்

ஜனாதிபதி தேர்தலை முன்னிட்டு எதிர்வரும் 21 மற்றும் 22 ஆம் திகதிகளில் அனைத்து மதுபானசாலைகளும் மூடப்படும் என மதுவரித் திணைக்களம் தெரிவித்துள்ளது.

தேர்தல்கள் ஆணைக்குழுவின் கோரிக்கைக்கு அமைய இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என மதுவரி ஆணையாளர் நாயகம் எம்.ஜி.குணசிறி தெரிவித்துள்ளார்.

மதுபானங்களை சில்லறைக்கு விற்பனை செய்யும் அனைத்து இடங்களும் 21 மற்றும் 22 ஆம் திகதிகளில் மூடப்படும் என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

Exit mobile version