Site icon Tamil News

பாரிஸில் வீதியில் பெண் ஒருவருக்கு காத்திருந்த அதிர்ச்சி – காப்பாற்றிய பொலிஸார்

பாரிஸில் பெண் ஒருவரிடம் தவறான நடந்துக் கொண்டிருந்த இளைஞன் ஒருவனை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

பரிஸ் 18 ஆம் வட்டாரத்தின் வீதியில் இச்சம்பவம் வெள்ளிக்கிழமை இரவு இடம்பெற்றது.

பொலிஸாரின் வீதி கண்காணிப்பில் ஈடுபட்டிருந்த போது, வீதியின் அருகே வைத்து 28 வயதுடைய பெண் ஒருவரை நபர் ஒருவர் பாலியல் துஷ்பிரயோகத்திற்குட்படுத்திக்கொண்டிருப்பதை அவதானித்தனர்.

அதிகளவு மது உட்கொண்டிருந்த குறித்த பெண்ணுக்கு, அவர் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டுக்கொண்டிருப்பது தெரிந்திருக்கவில்லை என தெரிவிக்கப்படுகிறது.

குறித்த நபரை பொலிஸார் கைது செய்யப்பட்டார். பாதிக்கப்பட்ட பெண் Bichat மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். விசாரணைகள் இடம்பெற்று வருகிறது.

Exit mobile version