செல்போன் பழக்கத்தால் சில மாணவர்கள் பல்கலைக்கழக படிப்பை கூட பாதியில் நிறுத்தியிருப்பது தெரியவந்துள்ளது.
குழந்தைகள் கையடக்கத் தொலைபேசி பாவனை தொடர்பில் பெற்றோர்கள் அதிக அக்கறையுடன் செயற்பட வேண்டுமென ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் மானுடவியல் கற்கைகள் பிரிவின் சிரேஷ்ட பேராசிரியர் தேவிகா யசஞ்சலி ஜயதிலக்க தெரிவித்துள்ளார்.
கையடக்கத் தொலைபேசிகளைக் கொடுப்பதற்குப் பதிலாக விளையாட்டுகளின் அழகையும் சூழலை அனுபவிக்கவும் சிறுவர்களை பழக்கப்படுத்த வேண்டும் என தேவிகா யசஞ்சலி ஜயதிலக்க வலியுறுத்தியுள்ளார்.