பிரதம மந்திரி கெய்ர் ஸ்டார்மர் பிரிட்டனுக்கான தனது திட்டங்களுடன் ஒத்துழைக்குமாறு வாக்காளர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளார்.
குறுகிய காலத்தில் கடுமையான முடிவுகள் எதிர்காலத்தில் உயர் வாழ்க்கைத் தரம், பாதுகாப்பான தெருக்கள் மற்றும் சிறந்த சேவைகள் போன்ற ஆதாயங்களுக்கு வழி வகுக்கும் என்று அவர் சுட்டிக்காட்டுள்ளார்.
வடக்கு ஆங்கில நகரமான லிவர்பூலில் தனது தொழிற்கட்சியின் வருடாந்திர மாநாட்டில் உரையாற்றிய போதே ஸ்டார்மர் இதனை தெரிவித்துள்ளார்.
அவரது அரசாங்கம் கடினமான முடிவுகளை எடுக்கிறது, அதாவது ஓய்வூதியம் பெறுபவர்களுக்கான குளிர்கால எரிபொருள் கொடுப்பனவுகளை வெட்டுவது போன்ற நாடு முழுவதிலும் மற்றும் அவரது கட்சிக்குள்ளும் விமர்சனங்களை ஈர்த்தது.