Site icon Tamil News

ஐரோப்பாவில் அவசர பாதுகாப்பு நடவடிக்கை – ஐஎஸ் பயங்கரவாதிகள் குழு கைது

துருக்கி நடத்திய பல நடவடிக்கைகளில் ஐ.எஸ் பயங்கரவாத சந்தேக நபர்களின் குழு கைது செய்யப்பட்டுள்ளது.

நேற்றைய தினம் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது ஐஎஸ்ஐஎஸ் பயங்கரவாத அமைப்பைச் சேர்ந்தவர்கள் என சந்தேகிக்கப்படும் 147 பேரை கைது செய்துள்ளதாக துருக்கி பாதுகாப்புப் படையினர் அறிவித்துள்ளனர்.

30 நகரங்களில் இந்த சோதனை நடத்தப்பட்டுள்ளது.

கடந்த வாரம் ரஷ்யாவின் தலைநகர் மொஸ்கோவை குறிவைத்து தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 137 பொதுமக்கள் உயிரிழந்தனர்.

அந்த சம்பவத்தை அடுத்து பல ஐரோப்பிய நாடுகள் பாதுகாப்பை பலப்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளன.

Exit mobile version