Site icon Tamil News

இலங்கைக்கு வர திட்டமிட்டுள்ள சிங்கப்பூர் பிரதமர்

 

சிங்கப்பூருக்கும் இலங்கைக்கும் இடையிலான அரசியல், பொருளாதார மற்றும் சமூக உறவுகளை வலுப்படுத்துவதற்கு அர்ப்பணிப்புடன் இருப்பதாக சிங்கப்பூர் பிரதமர் லீ சியன் லூங் தெரிவித்ததாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் உத்தியோகபூர்வ விஜயத்தின் போது இடம்பெற்ற இருதரப்பு கலந்துரையாடல்களை பாராட்டி சிங்கப்பூர் பிரதமர் ஜனாதிபதிக்கு அனுப்பியுள்ள விசேட கடிதத்திலேயே இதனைக் குறிப்பிட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு குறிப்பிட்டுள்ளது.

இரு நாடுகளுக்குமிடையிலான இராஜதந்திர உறவுகளை பேணுவதற்கான உறுதிப்பாட்டை மேலும் உறுதிப்படுத்தும் வகையில் அவர் விரைவில் இலங்கைக்கான உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொள்வார் என எதிர்பார்க்கப்படுவதாகவும் சிங்கப்பூர் பிரதமர் அனுப்பியுள்ள கடிதத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு மேலும் தெரிவித்துள்ளது.

Exit mobile version