Site icon Tamil News

பிரான்ஸ் தலைநகரில் கேட்ட சத்தத்தால் குழப்பமடைந்த பொலிஸார்

பிரான்ஸ் தலைநகர் பாரிசில் துப்பாக்கிச்சூடு சத்தம் கேட்டதால் மக்கள் மற்றும் பொலிஸார் குழப்பமடைந்துள்ளனர்.

19 ஆம் வட்டாரத்தில் உள்ள rue de la Marseillaise வீதியில் இந்த துப்பாக்கிச்சூடு இடம்பெற்றுள்ளது. நான்கு தடவைகள் துப்பாக்கி முழக்கம் கேட்டதாக தெரிவிக்கப்படுள்ளது.

சம்பவ இடத்துக்கு விரைந்து சென்ற பொலிஸார் அங்கு அசம்பாவிதங்கள் எதையும் பார்க்க முடியவில்லை. எவரும் காயமடையவில்லை எனவும், துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்ட ஒருவர பொலிஸார் தேடி வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நான்கு தடவைகள் காதைக் கிழிக்கும் சத்தத்துடன் முழக்கம் கேட்டதாக அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.

துப்பாக்கிச்சூடு நடத்தியவர் சம்பவ இடத்தில் இருந்து தப்பி ஓடியுள்ளார்.

Exit mobile version