Site icon Tamil News

தாயுடன் தொடர்பில் இருந்த பொலிஸ் சார்ஜென்ட்!! எதிர்ப்பு தெரிவித்த மகள் மீது கொடூர தாக்குதல்

தாயுடனான சாதாரண உறவுக்கு எதிர்ப்புத் தெரிவித்த பெண்ணின் 17 வயது மகளை கொடூரமாகத் தாக்கியதாகக் கூறப்படும் பொலிஸ் சார்ஜென்டை ஸ்ரீபுரா பொலிஸார் கைது செய்துள்ளனர்.

தாக்குதலுக்கு இலக்கான 17 வயது சிறுமி படுகாயமடைந்த நிலையில் பதவி ஸ்ரீபுர வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

திருகோணமலை, உப்புவெளி பொலிஸில் கடமையாற்றும் சார்ஜன்ட் ஒருவர் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

சந்தேகத்திற்குரிய சார்ஜன்ட், பதவிய ஸ்ரீபுர பிரதேசத்தில் வசிக்கும் பெண் ஒருவருடன் சில காலமாக தொடர்பு வைத்திருந்ததாக கூறப்படுகிறது.

இந்த உறவை நிறுத்துமாறு மகள் தாயிடம் பலமுறை கோரிக்கை விடுத்ததாகவும் கூறப்படுகிறது.

மகள் வீட்டுக்கு வந்த போது தாயுடன் உறவில் ஈடுபட்டதாக கூறப்படும் பொலிஸ் சார்ஜன்டை பார்த்து, உடனடியாக வீட்டை விட்டு வெளியேறுமாறும், இந்த உறவை நிறுத்துமாறும் கூறி திட்டியதாக தெரியவந்துள்ளது.

இதனால் ஆத்திரமடைந்த சார்ஜன்ட் சிறுமியை தாக்கிவிட்டு ஓடிவிட்டதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

இது தொடர்பில் கிடைத்த முறைப்பாட்டின் பிரகாரம் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டதுடன் சிறுமியை தாக்கியதாக கூறப்படும் பொலிஸ் சார்ஜன்ட் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளார்.

இது தொடர்பாக ஒழுக்காற்று விசாரணை நடத்தப்பட்டு கைது செய்யப்பட்ட சார்ஜன்டை பணி இடைநிறுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என சிரேஷ்ட பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

சம்பவம் குறித்து ஸ்ரீபுரா பொலிசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Exit mobile version