Site icon Tamil News

பொலிஸ் அதிகாி தன்னைத் தானே சுட்டுக்கொண்டு பலி

மாத்தறை, கொட்வில நீதிமன்ற வளாகத்திற்கு முன்பாக பொலிஸ் சார்ஜன்ட் ஒருவர் இன்று தன்னைத்தானே சுட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார்.

கொட்வில நீதிமன்ற வளாகத்தின் முன் வாயிலுக்கு அருகில் குறித்த அதிகாரி தன்னைத்தானே சுட்டு தற்கொலை செய்து கொண்டதாக நெத் நியூஸ் செய்தியாளர் தெரிவித்தார்.

பல நாட்களாக சுகயீன விடுமுறையில் சென்றிருந்த நிலையில் குறித்த அதிகாரி இன்று அந்த இடத்திற்கு திரும்பியுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதி பொலிஸ் மா அதிபர் நிஹால் தல்துவா தெரிவித்தார்.

பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றிய பொலிஸ் உத்தியோகத்தர் பொலிஸ் நிலையத்தை விட்டு வெளியேறும் போது உயர் அதிகாரி ஒருவரால் அழைக்கப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் மேலும் குறிப்பிட்டார்.

Exit mobile version