Site icon Tamil News

பிரித்தானியா கலவரத்திற்கு காரணமான பொய்யான தகவலை பரப்பிய நபர் கண்டறியப்பட்டார்!

பிரித்தானியா – சவுத்போர்ட் கத்தியால் குத்திய சந்தேக நபர் ஒரு புகலிடக் கோரிக்கையாளர் என்று பொய்யான வதந்திகளைப் பரப்பிய நபர் அடையாளம் காணப்பட்டுள்ளார்.

கடந்த வாரம் மெர்சிசைட் நகரத்தில் டெய்லர் ஸ்விஃப்ட்-கருப்பொருள் கொண்ட விடுமுறை கிளப்பில் மூன்று இளம் பெண்கள் கத்தியால் குத்தப்பட்ட சம்பவத்தை தொடர்ந்து பிரித்தானியா முழுவதும் வன்முறை பரவியுள்ளது.

இதனால் புலம் பெயர் மக்களுக்கும் சிக்கல்கள் ஏற்பட்டுள்ளன. அவர்கள் தங்கியிருந்த ஹோட்டல்களை தாக்குவதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டது.

இந்த சம்பவங்கள் தாக்குதல் சம்பவத்திற்கு காரணமானவர் ஒரு புலம் பெயர் இஸ்லாமியர் என்ற தவறான தகவல்கள் பரப்பபட்டதை தொடர்ந்த முன்னெடுக்கப்பட்டது.

இந்நிலையில் அந்த தவறான தகவலை பரப்பிய பெண் தற்போது அடையாளம் காணப்பட்டுள்ளார்.

Exit mobile version