Site icon Tamil News

ஆஸ்திரேலியாவில் இருந்து இலங்கை வந்த விமானத்தில் உயிரிழந்த பயணி

ஆஸ்திரேலியாவின் மெல்பேர்ன் நகரிலிருந்து கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வந்து கொண்டிருந்த விமானத்தில் பயணி ஒருவர் உயிரிழந்துள்ளார்.

திடீரென சுகவீனமடைந்து குறித்த நபர் விமானத்திலேயே உயிரிழந்துள்ளார்.

மெல்பேர்னிலிருந்து நேற்று இரவு 10.35 மணியளவில் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்த ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் விமானமான UL-605 இல் இந்த மரணம் இடம்பெற்றுள்ளது.

விமான நிலையத்திற்கு பொறுப்பான அதிகாரி இந்த தகவலை உறுதிப்படுத்தியுள்ளார்.

மெல்போர்னில் இருந்து விமானம் புறப்பட்ட சிறிது நேரத்தில், பயணிக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டது.

பின்னர் அவர் விமானத்தில் உயிரிழந்ததையடுத்து விமானத்தை மெல்பேர்ன் விமான நிலையத்திற்கு திருப்பி விடுவதற்கு நடவடிக்கை எடுத்த தீர்மானிக்கப்பட்டது.

எனினும் பதிலாக கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு கொண்டு வர விமானிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

சடலம் கட்டுநாயக்க விமான நிலையத்தில் விமான நிலைய பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டதுடன் சடலம் பிரேத பரிசோதனைக்காக நீர்கொழும்பு பொது வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.

Exit mobile version