Site icon Tamil News

இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிக்கு எதிராக பிறப்பிக்கப்பட்டுள்ள உத்தரவு!

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவராக முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன செயற்படுவதைத் தடுக்கும் வகையில் பிறப்பிக்கப்பட்ட தடை உத்தரவை எதிர்வரும் மே மாதம் 9ஆம் திகதி வரை நீடிக்குமாறு கொழும்பு மாவட்ட நீதிமன்றம் இன்று (18.04) உத்தரவிட்டுள்ளது.

ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் ஆதரவாளரான முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்கவினால் தாக்கல் செய்யப்பட்ட முறைப்பாட்டினை நினைவு கூர்ந்து மாவட்ட நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.

Exit mobile version