Site icon Tamil News

கோடை காலத்திலும் நிரம்பி வழியும் பழைய சீவரம் பாலாறு தடுப்பணை

காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர் ஒன்றியம் திருமுக்கூடல் அருகே பாலாறு செய்யாறு வேகவதி ஆகிய மூன்று ஆறுகள் சங்கமிக்கின்றன.இங்குள்ள ஆற்றுப் படுகைகளை மையமாகக் கொண்டு சுற்றுவட்டார கிராமங்களின் குடிநீர் தேவைகள் பூர்த்தியாகின்றது.

இந்நிலையில் கடந்த 2020ம் ஆண்டு பழையசீவரம்-பழவேரி பாலாற்றின் குறுக்கே நபார்டு திட்டத்தின் கீழ் ரூபாய் 42கோடி செலவில் புதிய தடுப்பணையானது நீர்வளத் துறை.

மூலம் கட்டப்பட்டது.இந்த தடுப்பணையால் அரும்புலியூர், பாலுார், உள்ளாவூர் என பத்துக்கும் மேற்பட்ட சுற்றுவட்டார கிராம பகுதிகளிலுள்ள 12ஆயிரத்து 70ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகிறது.

மேலும் இந்ததடுப்பணையின் வலது மற்றும் இடது புறங்களில் மதகுடன் ஷட்டர் மற்றும் பாசன கால்வாயில் இருந்து அரும்புலியூர், பாலுார், உள்ளாவூர் உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்லும் வகையில் துணைக்கால்வாய்களும் அமைக்கப்பட்டுள்ளது.இது மட்டும் இல்லாமல் இந்ததடுப்பனைக்கு அருகே தாம்பரம்-பல்லாவரம் கூட்டு குடிநீர் திட்டத்திற்கும் நீர் எடுக்கப்பட்டு வருகிறது.

பருவ மழை காலங்களில் முழுவதுமாக இந்த தடுப்பணை நிரம்பி இருந்த நிலையில், தற்போது கோடை காலத்தில் இந்த தடுப்பணை முழுவதுமாக தண்ணீர் நிரம்பி ரம்மியமாக காட்சியளிக்கின்றது.

மேலும் பருவ மழை காலத்தின் போது ஏற்பட்ட வெள்ள பெருக்கால்.

இத்தடுப்பணை நிரம்பி வழிந்தப்போது தண்ணீரோடு மணல் அடித்து வந்து, தடுப்பணையின் பள்ளமான பகுதிகள் மூடப்பட்டு தற்போது அதிகளவில் மணல் உள்ளே இருப்பதினால் தான் தற்போது மீண்டும் தண்ணீர் நிறைந்து நிரம்பி வழிவதாக விவசாயிகள் கருத்து தெரிவிக்கின்றனர்.

மேலும் வரும் காலங்களில் பாலாற்றில் மீண்டும் ஏதேனும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டாலும் கூட இந்ததடுப்பணையில் மணல் அதிகளவில் நிறைந்துள்ளதால் தடுப்பணையில் முழுமையாக தண்ணீர் தேங்க இயலாத நிலை உள்ளதால் தேங்கியுள்ள மணல்களை அப்புறப்படுத்த வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுக்கின்றனர்.

Exit mobile version