Site icon Tamil News

பிரிட்டிஷ் விமான நிலையங்களில் மீண்டும் அமலுக்கு கொண்டுவரப்பட்டுள்ள பழைய விதிமுறை

பிரிட்டனில் உள்ள ஆறு விமான நிலையங்கள் பயணப் பைகளில் 100 மில்லி லிட்டருக்கு மேல் நீர் சார்ந்த பொருள்களைப் பயணிகள் எடுத்துச்செல்லக் கூடாது என்று அறிவித்துள்ளன.

கிட்டத்தட்ட ஓர் ஆண்டுக்கு மேலாக இந்த நடைமுறை அகற்றப்பட்டிருந்த நிலையில் அது தற்போது மீண்டும் நடப்புக்கு வந்துள்ளது.

நியூகாசல், லீட்ஸ் பிராட்ஃபர்ட், லண்டன் சிட்டி, அபெர்டீன், சவுத்என்ட், டீசைட் விமான நிலையங்களில் இந்த நடைமுறை பின்பற்றப்படும்.

புதிய அதிநவீன தொழில்நுட்ப கருவிகள் விமான நிலையத்தில் பொருத்தப்பட்டுள்ளன. அவற்றை சோதிக்க இந்த நடைமுறை மீண்டும் அமலுக்கு வந்ததாகக் கூறப்படுகிறது.

இந்த நடைமுறை தற்காலிகமானது என்றும் அது விரைவில் நீக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டது.

Exit mobile version