Site icon Tamil News

இலங்கையில் காச நோயால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை சடுதியாக அதிகரிப்பு!

காசநோய் மற்றும் மார்பு நோய்களுக்கான தேசிய வேலைத்திட்டத்தின்படி, கடந்த வருடம் பதிவான காசநோயாளிகளின் எண்ணிக்கையில் 46 வீதமானவர்கள் மேல் மாகாணத்தில் இருந்து பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அவர்களில் 25 வீதமானவர்கள் கொழும்பு மாவட்டத்தில் பதிவாகியுள்ளதாகவும், கொழும்பு மாநகர சபையின் எல்லைக்குள் மட்டுமே பதிவாகியுள்ள காசநோயாளிகளின் எண்ணிக்கை இந்தியா மற்றும் பங்களாதேஷ் ஆகிய நாடுகளின் எண்ணிக்கைக்கு சமமாக இருப்பதாகவும் தேசிய வேலைத்திட்டத்தின் சமூக சுகாதார நிபுணர் மிசாயா காதர் தெரிவித்தார்.

காசநோய் கட்டுப்பாடு மற்றும் மார்பு நோய்கள் குறித்து சுகாதார மேம்பாட்டு பணியகத்தில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

பதிவாகியுள்ள காசநோயாளிகளில் பெரும்பாலானோர் ஆண்களாகவும், புகைபிடித்தல் மற்றும் மதுபானம் அருந்துவதே இதற்குக் காரணம் என விசேட வைத்திய நிபுணர் திருமதி மிசாயா காதர் மேலும் தெரிவித்தார்.

Exit mobile version