Site icon Tamil News

கனடாவில் வெறுப்பு குற்றச் சம்பவங்களின் எண்ணிக்கை அதிகரிப்பு

கனடாவில் கடந்த ஆண்டை விட வெறுப்பு குற்றச் சம்பவங்கள் 55 சதவீதம் அதிகரித்துள்ளது என  டொராண்டோ பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கடந்த ஆண்டு இதே காலத்துடன் ஒப்பிடுகையில், வெறுப்புணர்வை தூண்டும் வகையில் நடந்த சம்பவங்களின் எண்ணிக்கை 55 சதவீதம் அதிகரித்துள்ளது என டொராண்டோ  பொலிஸ் அதிகாரிகள் தெரிவித்தனர்.

இதன்படி, நாளாந்தம் ஐந்து வெறுப்பு குற்ற விசாரணைகளை முன்னெடுப்பதாக  பொலிஸார் கூறியுள்ளனர்.  இந்த ஆண்டு இதுவரை நடந்ததாக கூறப்படும் 221 வெறுப்பு குற்றங்களில் 45 சதவிகிதம் Antisemitism ஆகும்.

இது ஏனைய அனைத்து வெறுப்பு குற்றங்களை விட அதிகமானது என  பொலிஸ் துணைத் தலைவர் Robert Johnson  தெரிவித்துள்ளார்.

பொலிஸார் மீதான அவநம்பிக்கை காரணமாக பெரும்பாலான வெறுப்புக் குற்றங்கள் குறைவாக பதிவாகின்றன என சமூக உறுப்பினர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

இஸ்ரேல் – ஹமாஸ் யுத்தம் கடந்த ஆண்டு ஒக்டோபர் ஏழாம் திகதி ஆரம்பித்ததில் இருந்து, 1,378 வெறுப்புக் குற்றங்களை விசாரித்தாக டொராண்டோ பொலிஸார் சுட்டிக்காட்டியுள்ளனர்.

இவற்றில் 333 சம்பவங்கள் வெறுப்புணர்வை தூண்டியவை என தீர்மானிக்கப்பட்டது. இந்தக் காலத்தில் அதிகாரிகள் வெறுப்புக் குற்றங்கள் தொடர்பாக 107 பேரை கைது செய்து, 268 குற்றச்சாட்டுகளை பதிவு செய்துள்ளனர்.

Exit mobile version