பனாமாவிலிருந்து அமெரிக்காவிற்குச் சென்றுகொண்டிருந்த விமானம், புறப்பட்ட இடத்திற்கே திரும்பிய சம்பவத்தால் குழப்ப நிலை ஏற்பட்டுள்ளது.
விமானக் கழிவறையில் மர்மப் பொட்டலம் இருந்தமையே இதற்கு காரணாக கூறப்படுகின்றது.
இதனையடுத்து பயணிகளை வெளியேற்றி பொலிஸார் வெடிகுண்டுப் பிரிவு சோதனை நடத்தியது.
பொட்டலத்தில் வெடிகுண்டு அல்ல… பெரியவர்களுக்கான அணையாடை (diaper) தான் இருந்ததென பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
அணையாடை கவனமாகக் கறுப்புக் குப்பைப் பையில் சுற்றி வீசப்பட்டிருந்தது என்று விமான நிலையத்தின் பாதுகாப்புத் தலைவர் கூறினார்.
பொலிஸார் அந்த மர்மப் பொட்டலத்தின் படத்தைச் சமூக ஊடகத்தில் பதிவேற்றியது