Site icon Tamil News

இலங்கையில் பரபரப்பை ஏற்படுத்திய கொலை

மத்துகம பிரதேசத்தில் கூரிய ஆயதத்தால் தாக்கப்பட்டு ஒருவர் உயிரிழந்துள்ளார்.

இந்த சம்பவம் இன்று சனிக்கிழமை அதிகாலை இடம்பெற்றுள்ளதென மத்துகம பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

உயிரிழந்தவர் மத்துகம , ஓவிட்டிகல பிரதேசத்தை சேர்ந்த 38 வயதுடையவராவார். இவர் சம்பவத்தின் போது சில சந்தேக நபர்களினால் கூரிய ஆயதத்தால் தாக்கப்பட்டு பலத்த காயமடைந்துள்ளார்.

இதனையடுத்து காயமடைந்தவர் களுத்துறை – நாகொடை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

இந்த சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர்கள் தொடர்பிலான தகவல்கள் இதுவரை கண்டறியப்படவில்லை என பொலிஸார் தெரிவித்தனர்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மத்துகம பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Exit mobile version