கடலில் மூழ்கும் மக்கள் கண்டிப்பாகக் காப்பாற்றப்பட வேண்டும்” என்று புனித பாப்பரசர் பிரான்ஸிஸ் கூறியுள்ளார்.
இந்த நிலையில் புகலிடம் தேடிக் கடல் கடந்துவருகின்றவர்கள் விடயத்தில் “மனிதத்தை” மதிக்குமாறு வேண்டுகோள் விடுத்திருக்கிறார்.
“மோதல்கள், வறுமை மற்றும் சுற்றுச்சூழல் பேரழிவுகள் ஆகியவற்றிலிருந்து தப்பி வெளியேறுவோர் , ஒரு சிறந்த எதிர்காலத்திற்கான தங்களது தேடல் அடியோடு நிராகரிக்கப்படுவதை மத்தியதரைக் கடலில் காண்கிறார்கள்,” “இந்த அற்புதமான கடல் ஒரு மகத்தான கல்லறையாக மாறியுள்ளது.
அங்கு பல சகோதர சகோதரிகள் நல்லடக்கத்துக்கான உரிமை கூட இன்றி உயிரிழக்கிறார்கள்”-என்றும் பாப்பரசர் மன வருத்தத்துடன் தெரிவித்திருக்கிறார்.
இரண்டு நாள் விஜயம் மேற்கொண்டு பிரான்ஸின் மத்தியதரைக் கடல் நகரமாகிய மார்செய்க்கு வருகை தந்த பாப்பரசர் பிரான்ஸிஸ் அங்குள்ள நோத்த-டாம்-து-லா- கார்ட் பசிலிக்கா (Basilica of Notre-Dame de la Garde) கத்தோலிக்க ஆலயத்தின் குன்றின் உச்சியில் – மத்தியதரைக் கடலை நோக்கிய திசையில் இருந்தவாறு – உரையாற்றினார்.
அவரது உரையைச் செவிமடுப்பதற்காக உள்நாட்டில் இருந்தும் வெளிநாடுகளில் இருந்தும் வந்த பல்லாயிரக்கணக்கான கத்தோலிக்கர்கள் அங்கு திரண்டிருந்தனர்.