Site icon Tamil News

சுதந்திரக் கட்சியின் மத்திய குழு கூட்டத்தில் முக்கிய தீர்மானம்

அரசாங்கத்தில் பதவிகளை வகித்ததன் காரணமாக கட்சி அங்கத்துவம் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ள ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி உறுப்பினர்களை மீண்டும் இணைத்துக் கொள்ள இன்று (15) நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் அகில இலங்கைக் குழு மற்றும் செயற்குழு இன்று காலை கூடியபோதே இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

அரசாங்கத்தில் பதவிகளைப் பெற்ற கட்சி உறுப்பினர்களும் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.

குறித்த கூட்டத்தில் அரசாங்கத்தில் பதவிகளை வகித்தமையால் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்ட பதவிகளுக்கு உரிய கட்சி உறுப்பினர்கள் நியமிக்கப்பட்டனர்.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொருளாளராக அமைச்சர் லசந்த அழகியவன்னவை நியமிக்கவும் தீர்மானிக்கப்பட்டது.

இதேவேளை ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மத்திய செயற்குழு கூட்டம் கட்சியின் தலைவர் மைத்திரிபால சிறிசேன தலைமையில் நேற்று (14) பிற்பகல் நடைபெற்றது.

அரசாங்கத்தில் பதவிகளை வகித்ததன் காரணமாக கட்சி உறுப்புரிமையை இடைநிறுத்திய சுதந்திரக் கட்சி உறுப்பினர்கள் குழுவும் இதில் இணைந்துகொண்டது.

Exit mobile version