நிட்டம்புவ – திஹாரி பகுதியில் நபரொருவர் கொலை செய்யப்பட்டுள்ளார் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
முச்சக்கர வண்டி நிறுத்தும் இடத்தில் ஏற்பட்ட வாய்த்தர்க்கம் மோதலில் முடிவடைந்தமையே கொலைக்கான காரணமென பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குறித்த நபர் இரும்பினால் தாக்கி கொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.
நிட்டம்புவ பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.