Site icon Tamil News

முகாமில் இராணுவ வீரர் உயிரிழந்த விவகாரம் – 4 இராணுவ வீரர்கள் கைது!

ஹொரண, தொம்பாகொட இராணுவ முகாமில் கடமையாற்றும் போது உயிரிழந்த இராணுவ வீரரின் மரணம் தொடர்பில் சந்தேகத்தின் பேரில் அதே முகாமைச் சேர்ந்த 4 இராணுவத்தினரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

பொலிஸாரினால் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் போதும், நீதவான் விசாரணைகளின் போதும் முரண்பட்ட வாக்குமூலங்களை வழங்கியமையினால் குறித்த படையினர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட 4 இராணுவத்தினருடன் உயிரிழந்த இராணுவ வீரர் முகாமில் மதுபான விருந்து நடத்தியுள்ளதாக மேலதிக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

பின்னர் இராணுவ முகாமில் உள்ள குளத்தில் நீராடும்போது நீரில் மூழ்கி குறித்த இராணுவ வீரர் உயிரிழந்திருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.

அப்போது உயிரிழந்த இராணுவ வீரரின் கையடக்கத் தொலைபேசியை யாருக்கும் தெரியாமல் ஏனைய இராணுவ வீரர்கள் குளத்தில் வீசியிருப்பது தெரியவந்துள்ளது.

Exit mobile version