Site icon Tamil News

இஸ்ரேல் – பாலஸ்தீன மோதல் : ஐ.நா உயர்நீதிமன்றத்தில் விசாரணை!

ஐக்கிய நாடுகள் சபையின் உயர் நீதிமன்றம் இன்றைய தினம் (19.02) இஸ்ரேல் – பாலஸ்தீன மோதல் குறித்த விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.

இதன்படி 57 வருடங்கள் நீடித்து நில ஆக்கிரமிப்பு தொடர்பான பிரச்சினைகளுக்கு தீர்வுகாணும் முயற்சிக்கு முக்கிய மைல்கல்லாக இது பார்க்கப்படுகிறது.

இந்த பிரச்சினை குறித்த விசாரணைகள் தொடர்ச்சியாக ஆறு நாட்களுக்கு முன்னெடுக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இன்றைய தினம் (19.02) முதலில் பேசும் பாலஸ்தீனிய பிரதிநிதிகள், இஸ்ரேலிய ஆக்கிரமிப்பு சர்வதேச சட்டத்தின் மூன்று முக்கிய கோட்பாடுகளை மீறியதால் அது சட்டவிரோதமானது என்று வாதிடுவார்கள் என சட்டத்தரணிகள் தெரிவித்துள்ளனர்.

இஸ்ரேல் ஆக்கிரமிக்கப்பட்ட பெரும் நிலப்பரப்பை இணைத்ததன் மூலம் பிராந்திய வெற்றிக்கான தடையை மீறி, பாலஸ்தீனியர்களின் சுயநிர்ணய உரிமையை மீறி, இன பாகுபாடு மற்றும் நிறவெறி முறையை திணித்துள்ளது என்று அவர்கள் குற்றம் சாட்டுவார்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Exit mobile version