Site icon Tamil News

மீண்டும் தொடங்கும் இஸ்ரேல் – ஹமாஸ் போர்!

7 நாள் போர் நிறுத்தம் முடிவுக்கு வந்ததையடுத்து, இஸ்ரேலுக்கும் ஹமாஸ் அமைப்பினருக்கும் இடையே மீண்டும் மோதல்கள் தொடங்கியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

காசாவில் இருந்து இஸ்ரேலை நோக்கி ராக்கெட்டுகள் ஏவப்பட்டதாகவும், அந்த ராக்கெட்டுகளை இஸ்ரேல் ராணுவம் சுட்டு வீழ்த்தியதாகவும் சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

நேற்று (30.11) வரை இஸ்ரேலால் கடத்தப்பட்ட 110 பணயக்கைதிகளும், இஸ்ரேல் சிறைகளில் அடைக்கப்பட்டிருந்த 240 பாலஸ்தீனியர்களும் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

இதற்கிடையில், காசா பகுதியில் உள்ள இலக்குகள் மீது வான்வழித் தாக்குதல் நடத்தியதாக இஸ்ரேல் பாதுகாப்புப் படை தெரிவித்துள்ளது.

Exit mobile version