Site icon Tamil News

பிரித்தானியாவில் இளைஞர்கள் மத்தியில் ஏற்பட்டுள்ள பாதிப்பு!

பிரித்தானியாவில் இளைஞர்கள் அதிகளவில் மன அழுத்தத்திற்குள்ளாகுவதாக தெரியவந்துள்ளது.

இதனால் வேலை தேடுவதில் அவர்கள் சிரமத்தை எதிர்நோக்குவதாக Resolution Foundation நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது.

அந்த ஆய்வு 18க்கும் 24 வயதுக்கும் இடைபட்ட இளையர்களை உட்படுத்தியது என்று AFP Relaxnews கூறுகிறது.

பல பிரச்சினைகளுக்குச் சமூக ஊடகங்களை அளவுக்கு மீறிப் பயன்படுத்துவது காரணமாகிவிடுவதாக அதில் கூறப்பட்டுள்ளது.

எனவே இளையர்கள் எதிர்நோக்கும் மன அழுத்தத்தைச் சரிசெய்ய அரசாங்கம் உடனடி நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என்று பலர் வலியுறுத்தி வருகின்றனர்.

மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டவர்களில் பலர் வேலை இல்லாமல் இருப்பவர்கள் அல்லது குறைவான சம்பளத்துக்கு வேலை செய்பவர்கள் என்று ஆய்வில் தெரியவந்துள்ளது.

 

Exit mobile version