Site icon Tamil News

துருக்கியில் சில மணி நேரங்களில் பதிவான உச்ச வெப்பநிலை!

துருக்கியில் வெப்பநிலை சில மணிநேரங்களுக்குள் 42C ஆக உயரும் என முன்னறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் அங்கு பயணிப்போருக்கு பிரித்தானிய வெளியுறவுத்துறை அமைச்சகம் பயண எச்சரிக்கையை புதுப்பித்துள்ளது.

குறித்த எச்சரிக்கை பதிவில், “கோடை மாதங்களில் தீவிர வெப்பநிலை துருக்கியின் பல பகுதிகளை பாதிக்கலாம்  எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தற்போது வெப்ப அலையின் பிடியில் இருக்கும் துருக்கி மற்றும் பிற விடுமுறை பகுதிகளுக்குச் செல்லும் போது, ​​வெயிலின் தாக்கத்தை எவ்வாறு கையாள்வது என்பது குறித்த ஆலோசனைகளையும் NHS பகிர்ந்துள்ளது.

உங்களால் முடிந்தால் வெப்பத்திலிருந்து விலகி இருங்கள். நீங்கள் வெளியில் செல்ல வேண்டியிருந்தால், குறிப்பாக காலை 11 மணி முதல் மாலை 3 மணி வரை நிழலில் இருங்கள்.

சன்ஸ்கிரீன், தொப்பி மற்றும் லேசான ஆடைகளை அணியுங்கள் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Exit mobile version