இலங்கை தனியார் பல்கலைக்கழகங்களில் கல்வி கற்கும் ஐயாயிரம் மாணவர்களுக்கு அரசாங்கம் வழங்கும் வட்டியில்லா கடன் அடுத்த வாரம் முதல் மீள வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய இதனை தெரிவித்துள்ளார்.
இது தொடர்பான அமைச்சரவை பத்திரம் இந்த வாரம் அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்படும் என்றும் அமைச்சர் கூறினார்.
இதன் கீழ், 9 இலட்சம் ரூபாய் வட்டியில்லா கடன் கிடைக்கும், அதை திருப்பி செலுத்த இரண்டு ஆண்டுகள் அவகாசம் வழங்கப்படுகிறது.
ஒரு நாட்டில் கல்வியே சிறந்த முதலீடாக இருப்பதால், இக்கட்டான காலத்திலும் அரசாங்கம் கல்விக்கு முன்னுரிமை வழங்கும் என அமைச்சர் தெரிவித்தார்.