Site icon Tamil News

ஜெர்மனியில் பெண்களுக்கு நேர்ந்த கதி – உடற்பயிற்சியில் ஈடுபட்டிருந்தவர்களின் நிலை

ஜெர்மனியின் 3 பெண்களும் படுங்காயமடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ளவேல்ட் அண்மித்த பிரதேசத்தில் 8 பெண்கள் வீதியில் ஓடிய பொழுது வாகனம் ஒன்று 3 பெண்கள் மீது மோதியதாக தெரியவந்துள்ளது.

குறித்த பெண்கள் உடற்பயிற்சி செய்து கொண்டிருந்த பொழுது வேகமாக வாகனத்தை செலுத்தி வந்த 19 வயதுடைய இளைஞர் ஒருவர் அவர்கள் மீது மோதியுள்ளனர்.

வாகன் கட்டுப்பாட்டை இழந்ததாகவும், இதன் காரணத்தினால் வாகனமானது உடற்பயிற்சியை மேற்கொண்ட 3 பெண்கள் மீது தாக்குதலை மேற்கொண்டுதாக தெரியவந்துள்ளது.

குறித்த விபத்து தொடர்பில் பொலிஸார் தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

குறித்த தாக்குதலின் காரணமாக 45,46 மற்றும் 75 வயதுடைய 3 பெண்கள் படுங்காயம் அடைந்து தற்பொழுது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக தெரியவந்துள்ளது.

மேலும் ஏனைய 5 பேருக்கும் மனோவியல் ரீதியில் அழுத்தங்கள் ஏற்பட்டுள்ளதாகவும் தெரியவந்துள்ளது.

அவர்கள் மனோவியல் தொடர்பில் சிகிச்சை பெற்று வருகின்றமையும் குறிப்பிடத்தக்குது. அத்துடன் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகள் இடம்பெற்று வருவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Exit mobile version