Site icon Tamil News

பிரான்ஸ் தலைநகரில் இளைஞனுக்கு நேர்ந்த கதி

பிரான்ஸ் தலைநகரில் இடம்பெற்ற கத்திக்குத்து தாக்குதல் ஒன்றில் 17 வயதுடைய இளைஞன் கொல்லப்பட்டுள்ளார்.

பாரிசின் மேற்கு புறநகரான Rueil-Malmaison பகுதியில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

கட்டிடம் ஒன்றில் வைத்து குறித்த சிறுவன் அடிவயிற்றில் கத்தியால் குத்தப்பட்டுள்ளான். பின்னர் இரத்தம் வழியும் நிலையில் கட்டிடத்தில் இருந்து தப்பி ஓடி, வீதிக்குச் சென்றுள்ளார்.

அதிக இரத்தப்போக்கு காரணமாக சிறுவன் சுயநினைவு இழந்து, வீதியில் விழுந்துள்ளான்.

பொலிஸார் அழைக்கப்பட்டபோது தாக்குதலாளிகள் சம்பவ இடத்தில் இருந்து தப்பி ஓடியுள்ளனர்.

வீதியின் நடுவில் இருந்து குறித்த சிறுவனின் சடலம் பொலிஸாரால் மீட்கப்பட்டது.

மேற்படி சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Exit mobile version