Site icon Tamil News

ரயிலுடன் மோதிய சுற்றுலாப் பயணிகளுக்கு நேர்ந்த கதி!

இன்று காலை மிதிகம புகையிரத நிலையத்தில் ரஜரட்ட ரெஜினி விரைவு ரயிலுடன் மோட்டார் கார் மோதியதில் வெளிநாட்டு சுற்றுலா பயணி ஒருவரும் வழிகாட்டி ஒருவரும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

புகையிரதம் மஹோ சந்தியை நோக்கி சென்று கொண்டிருந்த போது விபத்துக்குள்ளானதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதற்கிடையில், விபத்தின் போது காரில் இரண்டு சுற்றுலா பயணிகள் மற்றும் சுற்றுலா வழிகாட்டி ஒருவரும் இருந்ததாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

சுற்றுலா பயணிகளில் ஒருவரும், சுற்றுலா வழிகாட்டியும் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

எச்சரிக்கை மணி அடித்த நிலையிலும், எச்சரிக்கை விளக்கு எரிந்துகொண்டிருந்த நிலையிலும் கார் லெவல் கிராசிங்கைக் கடக்க முயன்றதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.

Exit mobile version