Site icon Tamil News

இலங்கை பொலிஸாரின் நீதி நடவடிக்கை : 1133 பேர் கைது!

பொலிஸாரின் நீதி நடவடிக்கையின் கீழ் நாடளாவிய ரீதியில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்புகளில் இன்றைய (06.01) தினம் 1133 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதன்போது 405 கிராம் ஹெராயின், 1.07 கிலோ ஐஸ் போதைப்பொருள், 1,964 மாத்திரைகள் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர்களில் 54 பேர் தொடர்பில் தடுப்புக்காவல் உத்தரவின் பேரில் மேலதிக விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக பொது பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.

போதைக்கு அடிமையான 38 பேர் புனர்வாழ்விற்காக பரிந்துரைக்கப்பட்டுள்ளனர்.

Exit mobile version