Site icon Tamil News

ஜெர்மனியில் காணாமல் போன பெண்ணுக்கு நேர்ந்த கதி

ஜெர்மனியில் காணாமல் போன பெண் ஒருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

கடந்த சில தினங்களுக்கு முன்பு ஜெர்மனியின் நோற்றின்பிஸ்பாலின் மாநிலத்தில் உள்ள சீன் என்ற பிரதேசத்தில் 23 வயதுடைய ஒரு பெண்ணானவர் திடீரென மாயமாகியுள்ளார்.

குறித்த பெண்ணின் உறவினர்கள் பொலிஸாருக்கு தகவல் அளித்துள்ளனர்.

இந்நிலையில் 15ஆம் திகதி ஜெர்மனியின் நோற்றின்பிஸ்பாலின் மாநிலத்தின் மற்றுமொரு நகரமான எமெரிக்ஸ் என்ற பிரதேசத்தில் உள்ள அதிவேக போக்குவரத்து பாதையை அண்டிய வயல் வெளி ஒன்றில் இறந்த நிலையில் குறித்த பெண்ணின் உடல் கண்டுப்பிடிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு இந்த பெண் இறந்த நிலையில் இவரது உடல் எமெரிக்ஸ் பிரதேசத்தில் கண்டுப்பிடிக்கப்பட்டதை அடுத்து பொலிஸார் தீவிர விசாரணைகளை மேற்கொண்டிருந்தனர்.

இந்த விசாரணையை அடுத்து தற்பொழுது 23 வயதுடைய சந்தேக நபர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்நிலையில் பொதுமக்கள் மேலதிக உதவிகளை வழங்குமாறு பொலிஸார் வேண்டுதலை விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

அத்துடன் சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Exit mobile version