Site icon Tamil News

ஜெர்மனியில் 17 வயதுடைய மகனை கொலை செய்த தாய்

ஜெர்மனியில் கொலை சம்பவங்கள் அதிகரித்து வரும் நிலையில் ஒரு தாய் மகனை கொலை செய்ததற்காக மாவட்ட நீதிமன்றத்தில் முன்நிறுத்தப்பட்டுள்ளார்.

ஜெர்மனியின் மாவட்ட நீதிமன்றத்தில் 53 வயதுடைய ஒரு தாயார் கொலை செய்த குற்றச்சாட்டின் அடிப்படையில் நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டுள்ளார்.

குறித்த தாய் கடந்த 16.3. 2021 அன்று தனது 17 வயது வலது குறைந்த மகனை கொலை செய்துள்ளதாக தெரியவந்துள்ளது.

இரு வருட விசாரணைகளுக்கு பின் தற்பொழுது குறித்த தாய் தனது மகனை தாம் கொலை செய்ததாக ஒத்துக்கொண்டுள்ளார்.

இந்நிலையில் குறித்த தாய் மற்றும் மகன் தொடர்பில் பொலிஸார் மேலதிக தகவலை வெளியிட மறுத்துள்ளனர்.

மேலும் குறித்த தாயின் வாக்கு மூலம் முன்னுக்கு பின் முறணாக இருப்பதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

எனவே இந்த வழக்கு விசாரணையானது தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும் தெரியவந்துள்ளது.

Exit mobile version