Site icon Tamil News

சிங்கப்பூருக்கு 26 நாய்க்குட்டிகளைக் கடத்திய நபருக்கு நேர்ந்த கதி

மலேசியாவிலிருந்து சிங்கப்பூருக்கு 26 நாய்க்குட்டிகளையும் ஒரு பூனையையும் நபர் ஒருவர் கடத்தியுள்ளார்.

குறித்த நபருக்கு 12 மாதச் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டு (2022) அக்டோபர் 18ஆம் தேதி, அந்த மலேசிய நபர் லொரியில் சிங்கப்பூருக்கு வந்துசேர்ந்ததும் அவர் கடத்திவந்த நாய்க்குட்டிகளில் ஒன்று உயிரிழந்துள்ளது.

அதையடுத்து எஞ்சியவற்றில் 18 நாய்க்குட்டிகள் நோய்வாய்ப்பட்டு உயிரிழந்துள்ளது.

கடந்த ஆண்டு அக்டோபர் முதல் இவ்வாண்டு மார்ச் வரை தேசியப் பூங்காக் கழகமும் அதன் பங்காளித்துவ அமைப்புகளும் மொத்தம் 19 விலங்குக் கடத்தல் சம்பவங்களைக் கண்டறிந்தன.

தேசியப் பூங்காக் கழகம், சட்டவிரோத விலங்கு வர்த்தகத்துக்கு எதிரான நடவடிக்கைகளையும் எடுத்துவருகிறது.

அத்தகைய நடவடிக்கைகளின் மூலம் விலங்குக் கடத்தல், சட்டவிரோத விலங்கு வர்த்தகம் போன்றவற்றைக் கட்டுக்குள் கொண்டுவர முனைகிறது தேசியப் பூங்காக் கழகம்.

Exit mobile version