Site icon Tamil News

மாற்று சாதி இளைஞரை மணம் முடித்த இளம் பெண்ணுக்கு நேர்ந்த கதி

பெற்றோரை எதிர்த்து திருமணம் செய்து கொண்ட 22 வயது இளம்பெண்ணுக்கு ஏற்பட்ட சோகமான அனுபவம் குறித்து தகவல் வெளியாகி வருகிறது.

இந்தியாவில் இந்த சம்பவம் பதிவாகியுள்ளது.

குடும்பத்தினரின் மறுப்பை எதிர்த்து, அதே கிராமத்தில் உள்ள வேறு சாதி இளைஞரை அந்த பெண் திருமணம் செய்துள்ளார்.

அஞ்சலி என்ற இந்த அழகிய பெண்ணை சந்தீப் என்ற இளைஞன் திருமணம் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

வியாழன் அன்று தனது மனைவி வீட்டை விட்டு வெளியே செல்லும் போது பெற்றோரால் கொலை செய்யப்பட்டதாக அவரது கணவர் சந்தீப் பொலிசாரிடம் தெரிவித்துள்ளார்.

விசாரணையை தொடங்கிய பொலிசார், அஞ்சலியின் திருமணத்திற்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்ததால், பெற்றோரும், 20 வயது அண்ணனும் சேர்ந்து இந்த குற்றத்தை செய்ததை கண்டுபிடித்தனர்.

Exit mobile version