Site icon Tamil News

கோயிலின் மேற்கூரை இடிந்து விழுந்ததில் 13 பேர் உயிரிழப்பு

மத்தியப் பிரதேசத்தில் உள்ள இந்தூரின் பெலேஷ்வர் மகாதேவ் ஜூலேலால் கோயிலின் மேற்கூரை இடிந்து விழுந்ததில் குறைந்தது 13 பேர் கொல்லப்பட்டனர்,

ராம நவமியின் போது இந்தச் சம்பவம் நிகழ்ந்தது, கோயிலில் ஏராளமானோர் கூடியிருந்தனர்.

மத்திய இந்திய நகரமான இந்தூரில், இந்து சமயப் பண்டிகையின் போது ஏற்பட்ட இந்த சம்பவத்தில் 30 பேர் கிணற்றில் சிக்கிக் கொண்டனர்.

இரண்டு குழந்தைகள் உட்பட 9 பேர் மீட்கப்பட்டு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டதாகவும், மேலும் 25 பேர் இன்னும் கிணற்றில் சிக்கியுள்ளதாகவும் இந்திய தகவல்கள் தெரிவிக்கின்றன.

ராம நவமி விழாவையொட்டி இங்கு ஊர்வலமும் நடத்தப்பட்டதால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டதால் விபத்து ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

 

Exit mobile version