Site icon Tamil News

சிங்கப்பூரில் கட்டுமான தளத்தில் வெளிநாட்டு ஊழியருக்கு நேர்ந்த கதி

சிங்கப்பூரில்கட்டுமான தளத்தில் வாகனம் மோதி ஏற்பட்ட விபத்தில் வெளிநாட்டு ஊழியர் ஒருவர் உயிரிழந்தார்.

9ஆம் திகதி காலை 11:50 மணியளவில், அங்கிருந்து உதவி வேண்டி அழைப்பு வந்ததாக சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படை உறுதிப்படுத்தியது.

மேலும் 44 வயதுமிக்க அவர் கூ டெக் புவாட் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டதாகவும் குறிப்பிட்டது.

சுயநினைவின்றி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட ஊழியர், பின்னர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தாதாக சிங்கப்பூர் போலீஸ் கூறியது.

விசாரணைகள் நடந்து வருகின்றன. வாகனம் மோதுவதற்கு முன், அந்த ஊழியர் கட்டுமான தளம் அருகே தரையில் குந்தியிருந்ததாக சொல்லப்பட்டுள்ளது.

விபத்தை அடுத்து அவர் ரத்த வெள்ளத்தில் தரையில் கிடந்ததையும் புகைப்படத்தில் காண முடிந்தது.

Exit mobile version