Site icon Tamil News

தென்கொரியாவில் வெள்ளத்தில் மூழ்கிய சுரங்கப்பாதையில் இருந்து 9 உடல்கள் மீட்பு

தென் கொரியாவின் சியோங்கியூ நகருக்கு அருகே வெள்ளம் சூழ்ந்த சுரங்கப்பாதையில் சிக்கிய வாகனங்களைச் சென்றடைவதற்காக மீட்புப் பணிகளில் ஈடுபட்டு வரும் மீட்புப் படையினர் ஒன்பது உடல்களை மீட்டுள்ளனர்.

பல நாட்களாக பெய்த மழையால் ஏற்பட்ட வெள்ள நீர், மிக விரைவாக பாதாள சாக்கடையில் கொட்டியதால், பயணிகளும், ஓட்டுநர்களும் தப்பிக்க முடியாமல் வாகனங்களில் சிக்கிக்கொண்டனர்.

நாட்டின் பல பகுதிகளில் ஏற்பட்ட வெள்ளம், நிலச்சரிவு மற்றும் மின்வெட்டு ஆகியவற்றால் குறைந்தது 37 பேர் உயிரிழந்துள்ளனர்.

ஓசோங் நகரில் 685 மீட்டர் (2,247 அடி) நீளமான சுரங்கப்பாதையில் இன்னும் எத்தனை பேர் சிக்கியுள்ளனர் என்பது தெளிவாகத் தெரியவில்லை, ஆனால் 15 வாகனங்கள் நீரில் மூழ்கியிருக்கலாம் என்று கருதப்படுகிறது.

பேருந்துக்குள் இருந்து பல உடல்கள் மீட்கப்பட்டன. உயிர் பிழைத்த ஒன்பது பேர் நேற்று மீட்கப்பட்டனர்.

Exit mobile version