Site icon Tamil News

பிரான்ஸில் வீடொன்றில் திருடச்சென்றவருக்கு நேர்ந்த கதி

பிரான்ஸில் வீடொன்றில் திருடச்சென்ற திருடன் ஒருவர் புகைபோக்கிக்குள் சிக்குண்டுள்ள சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.

எனினும் தீயணைப்பு படையினர் உடனடியாக அழைக்கப்பட்டு திருடன் மீட்கப்பட்டுள்ளார்.

Melun (Seine-et-Marne) நகரில் இச்சம்பவம் சனிக்கிழமை இடம்பெற்றுள்ளது.

80 வயதுடைய மூதாட்டி ஒருவர் சனிக்கிழமை காலை தனது வீட்டின் கூரை பிரிக்கப்பட்டிருப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்து பொலிஸார் அழைத்துள்ளார்.

வீட்டுக்குள் நுழைந்த கொள்ளையர்கள் சிலர் கொள்ளையடிக்க முற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேவேளை தப்பிச் செல்ல முற்பட்ட திருடர்களில் ஒருவன் புகைபோக்கிக்குள் (chimney) சிக்குண்டுள்ளார்.

பின்னர் தீயணைப்பு படையினர் அழைக்கப்பட்டு குறித்த திருடன் மீட்கப்பட்டார். 25 வயதுடைய அல்ஜீரிய குடியுரிமை கொண்ட ஒருவனே கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Exit mobile version