Site icon Tamil News

இங்கிலாந்தில் வெப்பத்தின் தாக்கம் அதிகரிப்பு : மக்களுக்கு எச்சரிக்கை!

இங்கிலாந்தில் கிரீஸை விட வெப்பநிலை அதிகமாக இருக்கும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதன்படி இன்றைய தினம் வெப்பநிலையானது 18 பாகை செல்ஸியஸை விட அதிகமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த இந்த ஆண்டின் இதுவரையான காலப்பகுதியில் பதிவாகியுள்ள அதிகபட்ச வெப்பநிலையாகும்.

வடக்கு அயர்லாந்தில் அதிகபட்ச வெப்பநிலை பதிவாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. புற ஊதா கதிர்களின் தாக்கத்தில் இருந்து பாதுகாக்க மக்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இதற்கிடையே 2023 ஆம் ஆண்டில் கடந்த மார்ச் மாதம் 31 ஆம் திகதி 17.8 பாகை செல்ஸியஸ் பதிவாகியது. இதுவே கடந்த காலங்களில் பதிவான மிக உயர்ந்த வெப்பநிலை ஆகும்.

Exit mobile version