துபாயில் வீட்டுப்பணிப்பெண்களாக பணிபுரிந்த 42 பேரை நாட்டுக்கு அழைத்து வர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக டுபாயில் உள்ள இலங்கை தூதரகம் தெரிவித்துள்ளது.
துபாயில் பல்வேறு துன்புறுத்தல்களுக்கு உள்ளானதன் காரணமாகவே அவர்களை நாட்டிற்கு அழைத்து வருவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.
முன்னதாக, 10 பேர் கொண்ட குழு ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் விமானம் மூலம் நாட்டுக்கு அழைத்து வரப்பட்டதாக தூதரகம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.