Site icon Tamil News

நாட்டில் தற்போதுள்ள அமைப்புதான் குற்றச்செயல்களுக்கு காரணம் – உத்திக்க பிரேமரத்ன!

கடந்த 17 ஆம் திகதி பாராளுமன்ற உறுப்பினர் உத்திக்க பிரேமரத்னவின் வாகனம் மீது இனம்தெரியாத தாக்குதல்தாரிகள் துப்பாக்கிச்சூடு நடத்தினர்.

இந்த சம்பவம் குறித்து இன்றை (19.09) பாராளுமன்ற அமர்வில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இது தொடர்பில் கருத்து வெளியிட்ட அவர், நாட்டில் தற்போது உள்ள அமைப்புதான் இந்த குற்றச்செயலுக்கு காரணம் என சுட்டிக்காட்டியுள்ளார்.

மேலும் கருத்து வெளியிட்ட அவர்,  யார் துப்பாக்கிச் சூடு நடத்தினார்கள் என்பதை விட, தற்போதுள்ள அமைப்புதான் அந்தத் தாக்குதல் நடத்தப்பட்டது என்று நினைக்கிறேன்.

இந்த முறை சரியில்லை என்பது நம் அனைவருக்கும் தெரியும். இந்த முறை தவறானது என்பது நம் நாட்டு மக்களுக்கு தெரியும். நமது சமூக அமைப்பு தவறானது, நமது அரசியல் தவறானது. இந்தக் கறையால்தான் இன்று நாடு இந்த நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது” எனக் கூறியுள்ளார்.

Exit mobile version