Site icon Tamil News

எதிர்கட்சியினர் சிறந்த பொருளாதார திட்டங்களை எதிர்க்கிறார்கள் – மஹிந்த!

அரசியல் செய்வதற்கு ஏதும் இல்லாத காரணத்தினால் எதிர்க்கட்சிகள் பொருளாதார மீட்சிக்கான சிறந்த திட்டங்களையும் எதிர்க்கிறார்கள்  என மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

பொரள்ளை கெம்பல் மைதானத்தில் இன்று  இடம்பெற்ற மே தினக் கூட்டத்தில் உரையாற்றுகையில் அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

தொடர்ந்து தெரிவித்த அவர்,  பொய்யான விமர்சனங்கள் எழுந்த போது மக்களுக்காக அதிகாரத்தை விட்டுக் கொடுத்தோம். மக்கள் தற்போது உண்மையை விளங்கிக் கொண்டுள்ளார்கள்.

நாட்டின் தேசியத்தை இல்லாதொழிக்க ஆரம்ப காலத்தில் சர்வதேச சூழ்ச்சிகள் முன்னெடுக்கப்பட்டதற்கு பல விடயங்கள சான்று பகிர்க்கின்றன.

மக்களுக்காக ஆட்சியை கைப்பற்றவும்இமக்களுக்காக ஆட்சியை விட்டுக் கொடுக்கவும் அரசியல்வாதிகள் பழகிக் கொள்ள வேண்டும்.பொய்யான விமர்சனங்கள் எழுந்த போது மக்களுக்காக அதிகாரத்தை விட்டுக் கொடுத்தோம்.

தேவையாயின் பலமிக்க சக்தியாக ஒன்றிணைந்து மீண்டும் ஆட்சியை கைப்பற்றுவோம் என்றார்.

Exit mobile version